ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா |

மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு நான்காவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்த படத்திற்கு படை யாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டு துவக்க விழா பூஜையும் நேற்று நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பே அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது கதாநாயகியாக நடிகை கிரேஸ் ஆண்டனி நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. படத்தின் துவக்க விழா பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான ரோஷாக் திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் கிரேஸ் ஆண்டனி. கடந்த வருடம் தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ படத்தில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் இந்த கிரேஸ் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.