தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மலையாள திரையுலக நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவராக நடிகர் மோகன்லால் சில வருடங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்று இருந்தார். ஆனால் கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதில் ஒரு சிலர் கைதான நிகழ்வுகளும் நடந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் உள்ளிட்ட மொத்த நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அரசால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழு நடிகர் சங்க நிர்வாகத்தை கவனித்து வருகிறது. தேர்தல் நடத்தாமல் மீண்டும் ஒரு பொதுக்குழு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது, அல்லது தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என இரண்டு வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று முன்தினம் நீண்ட நாளைக்கு பிறகு கூடிய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாக குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை அந்த நிகழ்ச்சியிலேயே திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல நடிகர்களின் கோரிக்கையையும் நிராகரித்து தனது இந்த முடிவை உறுதிபட அறிவித்துள்ளார் மோகன்லால். இதனால் பொதுக்குழுவில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மோகன்லாலின் இந்த முடிவை தொடர்ந்து இன்னும் மூன்று மாதங்களுக்குள் நடிகர் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ தேர்தல் நடக்கலாம் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.