ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழிலும் 'பீஸ்ட், குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு தனது சிகிச்சைக்காக காரில் பயணித்தார். அதிகாலையில் தர்மபுரி அருகே ஒரு லாரியின் பின்னால் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருச்சூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூன்-9) ஷைன் டாம் சாக்கோவின் தந்தையின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மருத்துவமனையில் இருந்து ஷைன் டாம் சாக்கோவும் அவரது அம்மாவும் அழைத்து வரப்பட்டனர். கையில் அடிபட்டிருந்த நிலையில் சாக்கோவாவது ஓரளவுக்கு சமாளித்து நடந்து வந்தார். ஆனால் கால்களில் அடிபட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது தாய் படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் தான் அழைத்துவரப்பட்டார்.
இதில் கொடுமை என்னவென்றால் தனது கணவன் இறந்த செய்தி நேற்று காலை வரை அவருக்கு சொல்லப்படாமலேயே இருந்தது. அதன்பிறகு அவரிடம் பக்குவமாக விஷயத்தை சொல்லி மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.. இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்த தனது தந்தையின் உடலை பார்த்து ஷைன் டாம் சாக்கோ கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைப்பதாக இருந்தது.
கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை, நடிகையின் புகார், கைது, போதை மீட்பு மைய சிகிச்சை என தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் ஷைன் டாம் சாக்கோவிற்கு இந்த சூழலில் அவரது தந்தையின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்று சொல்லலாம்.