கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி |
மலையாள திரை உலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபலமான பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தவர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன். 78 வயதான இவர் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மற்ற மொழி படங்கள் மலையாளத்தில் வெளியாகும் போதும் அதன் பாடல்களை இவர் எழுதியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் ராஜமவுலியின் ஈகா படத்திலிருந்து அடுத்ததாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை மட்டுமல்ல அதன் மலையாள பதிப்புக்கு வசனங்களையும் கோபாலகிருஷ்ணன் தான் எழுதியிருந்தார்.
இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்த நிலையில் இயக்குனர் ராஜமவுலியும் தனது எக்ஸ் பக்கத்தின் மூலமாக தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மலையாள சினிமாவின் ஜாம்பவான் எழுத்தாளரான மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் மறைந்து விட்டார் என்கிற செய்தியை கேட்டதும் ரொம்பவே வருத்தமடைந்தேன். அவரது காலத்தால் அழியாத பாடல்கள், கவிதை மற்றும் வசனங்கள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஈகா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் மலையாள பதிப்புகளுக்கு அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையான விஷயம்” என்று கூறியுள்ளார்.