பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

மலையாள திரை உலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபலமான பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தவர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன். 78 வயதான இவர் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மற்ற மொழி படங்கள் மலையாளத்தில் வெளியாகும் போதும் அதன் பாடல்களை இவர் எழுதியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் ராஜமவுலியின் ஈகா படத்திலிருந்து அடுத்ததாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை மட்டுமல்ல அதன் மலையாள பதிப்புக்கு வசனங்களையும் கோபாலகிருஷ்ணன் தான் எழுதியிருந்தார்.
இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்த நிலையில் இயக்குனர் ராஜமவுலியும் தனது எக்ஸ் பக்கத்தின் மூலமாக தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மலையாள சினிமாவின் ஜாம்பவான் எழுத்தாளரான மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் மறைந்து விட்டார் என்கிற செய்தியை கேட்டதும் ரொம்பவே வருத்தமடைந்தேன். அவரது காலத்தால் அழியாத பாடல்கள், கவிதை மற்றும் வசனங்கள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஈகா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் மலையாள பதிப்புகளுக்கு அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையான விஷயம்” என்று கூறியுள்ளார்.




