விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் |

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிவிதம் படம் வெளியானது. பல வருட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளத்தில் இசையமைத்த படம் என்கிற பெருமையுடன் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் படும் கஷ்டங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்பட பட்டியலிலும் இடம் பிடித்தது.
ஆனால் சோதனையாக இந்த படத்தின் ஓடிடி வெளியீடு பல காரணங்களால் தாமதமாகி கொண்டே வந்தது. குறிப்பாக இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகி விட்டதால் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய தொகையை எதிர்பார்க்க, ஓடிடி நிறுவனங்கள் அந்த அளவிற்கு விலை கொடுக்க தயங்கி ஓதுங்கி நின்றதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நிலைமை சமூகமாகி நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 19ம் தேதி முதல் இந்த படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் சேர்த்து ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.