இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிவிதம் படம் வெளியானது. பல வருட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளத்தில் இசையமைத்த படம் என்கிற பெருமையுடன் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் படும் கஷ்டங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்பட பட்டியலிலும் இடம் பிடித்தது.
ஆனால் சோதனையாக இந்த படத்தின் ஓடிடி வெளியீடு பல காரணங்களால் தாமதமாகி கொண்டே வந்தது. குறிப்பாக இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகி விட்டதால் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய தொகையை எதிர்பார்க்க, ஓடிடி நிறுவனங்கள் அந்த அளவிற்கு விலை கொடுக்க தயங்கி ஓதுங்கி நின்றதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நிலைமை சமூகமாகி நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 19ம் தேதி முதல் இந்த படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் சேர்த்து ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.