‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறிய பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைந்துவிட்டது. அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த சலார் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் கடந்த சில வருடங்களாகவே தனது கடும் உழைப்பை கொடுத்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் ஒரு வழியாக வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் சலார் படத்தில் நடித்த சமயத்திலேயே பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து படே மியான் சோட்டே மியான் என்கிற படத்தில் வில்லனாக நடித்து வந்தார் பிரித்விராஜ். தற்போது இந்த படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளதுடன் ஆடு ஜீவிதம் வெளியாகும் அதே ஏப்ரல் பத்தாம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் பிரித்விராஜின் மாறுபட்ட நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.