பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கடந்த 2021ல் மலையாளத்தில் வெளியான படம் மின்னல் முரளி. பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். கிராமத்தில் வசிக்கும் இவர்கள் இருவரும் எதிர்பாராத மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி சூப்பர்மேன் பவர் கிடைப்பதாகவும் அதன்மூலம் அவர்களுக்குள் ஏற்படும் மோதலும் என வித்தியாச கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இரண்டாம் பாகம் கூட இந்த வருட இறுதியில் துவங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் காமிக்ஸ் புத்தகமாகவும் உருவாகி உள்ளது. டிங்கிள் காமிக்ஸ் ஸ்டுடியோ இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது. இன்று துவங்கி நாளை மறுநாள் வரை சாண்டியாகோவில் நடைபெற இருக்கும் சர்வதேச காமிக்ஸ் விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது.




