'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 2021ல் மலையாளத்தில் வெளியான படம் மின்னல் முரளி. பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். கிராமத்தில் வசிக்கும் இவர்கள் இருவரும் எதிர்பாராத மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி சூப்பர்மேன் பவர் கிடைப்பதாகவும் அதன்மூலம் அவர்களுக்குள் ஏற்படும் மோதலும் என வித்தியாச கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இரண்டாம் பாகம் கூட இந்த வருட இறுதியில் துவங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் காமிக்ஸ் புத்தகமாகவும் உருவாகி உள்ளது. டிங்கிள் காமிக்ஸ் ஸ்டுடியோ இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது. இன்று துவங்கி நாளை மறுநாள் வரை சாண்டியாகோவில் நடைபெற இருக்கும் சர்வதேச காமிக்ஸ் விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது.