இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் | ஹாலிவுட் வெப் தொடரில் தபு | ஆர்த்தி சுபாஷுக்கு திருமணமா? | விரைவில் வெளியாகும் திகில் தொடர் | சக நடிகை விபத்தில் மரணம்! வருத்தத்தில் மாரி ஹீரோயின் | கிளாமர் ரூட்டை கையில் எடுத்த ஷிவானி நாராயணன்! |
கடந்த 2021ல் மலையாளத்தில் வெளியான படம் மின்னல் முரளி. பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். கிராமத்தில் வசிக்கும் இவர்கள் இருவரும் எதிர்பாராத மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி சூப்பர்மேன் பவர் கிடைப்பதாகவும் அதன்மூலம் அவர்களுக்குள் ஏற்படும் மோதலும் என வித்தியாச கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இரண்டாம் பாகம் கூட இந்த வருட இறுதியில் துவங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் காமிக்ஸ் புத்தகமாகவும் உருவாகி உள்ளது. டிங்கிள் காமிக்ஸ் ஸ்டுடியோ இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது. இன்று துவங்கி நாளை மறுநாள் வரை சாண்டியாகோவில் நடைபெற இருக்கும் சர்வதேச காமிக்ஸ் விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது.