ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ, புலி, முடிஞ்சா இவனபுடி, விக்ராந்த் ராணா படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் சுதீப் மீது 9 கோடி ரூபாய் மோசடி புகார் கூறி பரபரப்பு கிளம்பி இருந்தார். இந்த புகாருக்கு சுதீப் பதில் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுவன் ஒருவனை சந்தித்தார் சுதீப்.
தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயது சிறுவன் சாக்ஷி. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவன் ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறான். இவரது தாய் சுரேகா ராணி. தந்தை மஹிந்தர், தச்சராக பணியாற்றுகிறார்.
தீவிர சுதீப் ரசிகரான சாக்ஷி அவரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தான். இந்த தகவல் சுதீபுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்த சுதீப் சிறுவனை சந்தித்து பேசினார். அவனுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கையூட்டினார். அவனது சிகிச்சைக்கும், குடும்பத்திற்கும் நிதி வழங்கினார். சாக்ஷியின் குடும்பத்தினர் சுதீபுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சுதீப் ஏற்கனவே சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.