25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ராதே ஷ்யாம் படத்தின் தோல்விக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தருவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடித்துள்ளார். வரும் ஜூன் 16ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் இந்த படத்திற்கான முன்பதிவு துவங்கி விட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆதரவற்ற குழந்தைகள் இந்த ஆதிபுருஷ் படத்தை பார்ப்பதற்காக மொத்தம் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் தனது சொந்த செலவில் வாங்கினார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு மனோஜ் மற்றும் அவரது மனைவி பூமா மவுனிகா ரெட்டி இருவரும் இணைந்து இதேபோன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஆதிபுருஷ் படம் பார்க்க வைக்கும் விதமாக 2500 டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். இது போன்ற பிரபலங்கள் ஆதிபுருஷ் படத்தை ஆதரவற்ற குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி மொத்தமாக டிக்கெட் வாங்கி வருவது ஒரு பக்கம் பாராட்டுக்களை பெற்றாலும் இன்னொரு பக்கம் படத்திற்கான பப்ளிசிட்டிகளில் இதுவும் ஒன்று என்றும் சிலர் கூறி வருகின்றனர்.