300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதற்கேற்றபடி போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை, திரையுலகில் உள்ள பல பிரபல நட்சத்திரங்களின் மீதும் சந்தேகப் பார்வை வீசி வருவதுடன் அவர்களை அவ்வப்போது அழைத்து விசாரித்தும் வருகிறது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகை சேர்ந்த விநியோகஸ்தரான கே.பி சவுத்ரி என்பவரை போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி சைபராபாத் போலீசார் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தெலுங்கில் வெளியிட்ட விநியோகஸ்தர் தான் இந்த கே.பி சவுத்ரி. அதன் பிறகு சர்தார் கபார் சிங், அதர்வா நடித்த கணிதன் உள்ளிட்ட படங்களை தெலுங்கில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராஜேந்தர் நகர் அருகில் உள்ள கிஸ்மத்பூர் என்கிற இடத்தில் உள்ள அவரது வீட்டை விட்டு அவர் புறப்படும் போது அவரது காரை மறித்த போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் ஒரு கிராம் அளவு கொண்ட 90 கோகைன் பாக்கெட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவாவில் இருந்து அவர் நூறு பாக்கெட்டுகள் வாங்கியதாகவும் மீதி 10 பாக்கெட்டுகளை யார் யாருக்கு அவர் விநியோகம் செய்தார் என்பது குறித்தும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளனராம். தெலுங்கு பட விநியோகஸ்தர் ஒருவர் இப்படி போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.