பிளாஷ்பேக்: சென்னை மாகாணத்தை முதன் முதலில் 'தமிழ்நாடு' என்று அழைத்தது சினிமா | தீவிர முருக பக்தர் யோகிபாபு | பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா |
மேடை மற்றும் தொலைக்காட்சிகளில் மிமிக்கிரி கலைஞராக வளர்ந்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர் கொல்லம் சுதி. 2015ம் ஆண்டு வெளியான 'காந்தாரி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்', 'குட்டநாடன் மர்ப்பப்பா', 'கேசு ஈ வீட்டை நாடன்', 'எஸ்கேப்', 'ஸ்வர்கத்திலே காட்டுறும்பு' 'கொல்லம்' உள்ளிட்ட பல படங்களில் சுதி நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் திரிச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதி உயிழந்தார். சுதிக்கு வயது 39. சுதியின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.