25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் அறிமுக படமாக இயக்கியிருந்தார். கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பஹத் பாஸில், அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க காமெடி கலந்த கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். படமும் ரசிகர்களின் வரவேற்பை ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த படத்திற்கு முதலில் கதாநாயகனாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நடிகர் நிவின்பாலியிடம் தான். இந்த படத்தின் கதை பற்றி இயக்குனர் நிவின்பாலியுடன் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் அவர் துறைமுகம் மற்றும் படவேட்டு ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் பஹத் பாசிலுடன் ஏதேச்சையாக பேசும்போது இந்த கதை பற்றி அகில் சத்யன் கூறியுள்ளார். கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆன பகத் பாஸில் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கேட்டுள்ளார்.
நிவின் பாலியிடம் ஏற்கனவே இந்த கதை குறித்து கூறியுள்ளதாக சொன்ன அகில் சத்யன் பின்னர் நிவின்பாலியை தொடர்பு கொண்டு, பஹத் பாசிலின் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் சந்தோஷமான நிவின்பாலி எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக இந்த கதையை பஹத் பாசிலுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அதேசமயம் ஏற்கனவே நிவின்பாலிக்கு ஏற்றபடி எழுதப்பட்டிருந்த இந்த கதையில் அதன்பிறகு பஹத் பாசிலுக்காக மீண்டும் சில மாற்றங்களை செய்தாராம் அகில் சத்யன்.