ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஷேன் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் படப்பிடிப்பு தளங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறி இரு நடிகர்களுக்கும் மலையாள தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து தடை விதித்தது. இந்த நிலையில் இரு நடிகர்களும் மலையாள நடிகர் சங்கத்தில் விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்
ஸ்ரீநாத் பாசி கொடுத்துள்ள கடிதத்தில், தன்னை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டும் இனி சங்கத்தின் விதிமுறைகளின் படி நடப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஷேன் நிகாம் எழுதியுள்ள கடிதத்தில் 'ஆர்டிஎக்ஸ்' படப்பிடிப்பு தடைபட்டது தனது தவறினால் அல்ல என்றும், உடல்நலக் குறைவால் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போதை குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.