ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஷேன் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் படப்பிடிப்பு தளங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறி இரு நடிகர்களுக்கும் மலையாள தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து தடை விதித்தது. இந்த நிலையில் இரு நடிகர்களும் மலையாள நடிகர் சங்கத்தில் விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்
ஸ்ரீநாத் பாசி கொடுத்துள்ள கடிதத்தில், தன்னை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டும் இனி சங்கத்தின் விதிமுறைகளின் படி நடப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஷேன் நிகாம் எழுதியுள்ள கடிதத்தில் 'ஆர்டிஎக்ஸ்' படப்பிடிப்பு தடைபட்டது தனது தவறினால் அல்ல என்றும், உடல்நலக் குறைவால் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போதை குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.