உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அதிரடி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கியிருந்தார். ஹிந்தியில் அமிதாப் நடிப்பில் பிங்க் என்கிற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்று பின்னர் தமிழில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு மொழிகளையும் தாண்டி தெலுங்கில் இந்த படம் வெளியான போது கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தாங்களே முந்திக்கொண்டு உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் வேணு ஸ்ரீராம். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், வக்கீல் சாப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். பவன் கல்யாண் தற்போது தன் கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.