'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளை காப்பாற்றும் பணியை மேற்கொண்டுள்ளார். துல்கர் தனது அறக்கட்டளை மற்றும் தனது தயாரிப்பு நிறுவனமான வேபாரார் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் கைட்ஸ் அறக்கட்டளையோடு இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளார்.
'Wayfarer's Tree of Life' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், 100 ஏழை குழந்தைகளுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. குழந்தைகளில் சிறுநீரகம், குடல் மற்றும் இருதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த திட்டம் மூலம் உதவி செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கான லோகோவை துல்கர் சல்மான் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் தனது அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.