'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
வழக்கறிஞராக இருந்து இயக்குனர் ஆனவர் கே.ஆர்.முரளி கிருஷ்ணா. 2019ம் ஆண்டு காரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் தமிழ் எழுத்தாளரான ஆர்.கே.நாராயணனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இது தவிர வேறு சில படங்களையும் இயக்கினார். இயக்கம் மட்டுமின்றி, பாலா நூகே(1987), கர்ணனா சம்பது(2005), ஹ்ருதய சாம்ராஜ்யம்(1989) மற்றும் மராயி குடிகே(1984) உள்பட பல படங்களையும் தயாரித்துள்ளார்.
63 வயதான முரளி கிருஷ்ணா பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முரளி கிருஷ்ணாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மனைவி உள்ளனர்.