
ஐரோப்பிய யாத்திரையில் பிரணவ் மோகன்லால்
அதேசமயம் துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோர் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து படங்களிலாவது நடித்து தங்களை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரோ ஹிட் படம் கொடுத்தாலும் கூட அடுத்த படத்தில் நடிப்பது குறித்து எந்த யோசனையும் இல்லாமல் ஜாலியாக யாத்திரை கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வளவு ஏன் இவரது முதல் படமான ஆதி ரிலீசான தேதியில், இவரோ இமயமலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இவர் யாத்திரை மேற்கொண்டு இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் வினித் சீனிவாசன். அதுமட்டுமல்ல ஐரோப்பாவில் உள்ள இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள 800 கிலோ மீட்டர் தூரத்தை இவர் நடந்தே பயணித்து கடந்ததாகவும் ஒரு ஆச்சரிய தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார் அந்தவகையில் இளம் ஹீரோக்களில் பிரணவ் மோகன்லால் சற்றே வித்தியாசமானவர் என்று தான் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!