ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்டாம் எனும் கிராமத்தில் உள்ள சில வீடுகள் சாலை விரிவாகத்திற்காக இடிக்கப்பட்டது. இவர்கள் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேவா கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பவன் கல்யாண் தொண்டர்கள் புடைசூழ சென்றார். அவர் சென்ற விதம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தனது காரில் அவர் மேற்கூரையில் அமர்ந்தபடி . சாவகாசமாக கால்களை நீட்டி உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அவரது காரில் அவருடைய கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று கொண்டிருந்தனர். அவர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்றிருந்தனர். டிரோன் கேமரா பதிவு, வீடியோகிராபர், போட்டோகிராபர் புடைச் சூழ பவன் பயணித்திருக்கிறார்.
தெலுங்கு படத்தின் வில்லன்கள் பாணியில் அவர் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது சாலை விதிகளை மீறியது தொடர்பான வழக்கு தொடர ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர்.




