மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்டாம் எனும் கிராமத்தில் உள்ள சில வீடுகள் சாலை விரிவாகத்திற்காக இடிக்கப்பட்டது. இவர்கள் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேவா கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பவன் கல்யாண் தொண்டர்கள் புடைசூழ சென்றார். அவர் சென்ற விதம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தனது காரில் அவர் மேற்கூரையில் அமர்ந்தபடி . சாவகாசமாக கால்களை நீட்டி உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அவரது காரில் அவருடைய கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று கொண்டிருந்தனர். அவர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்றிருந்தனர். டிரோன் கேமரா பதிவு, வீடியோகிராபர், போட்டோகிராபர் புடைச் சூழ பவன் பயணித்திருக்கிறார்.
தெலுங்கு படத்தின் வில்லன்கள் பாணியில் அவர் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது சாலை விதிகளை மீறியது தொடர்பான வழக்கு தொடர ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர்.