கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஸ்ரீநாத் பாஷி என்பவர் ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றபோது அங்கிருந்த தொகுப்பாளினியை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டினார் என்ற செய்தி வெளியாகி கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான பிரணயம் என்கிற படத்தின் மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகமான ஸ்ரீநாத் பாஷி, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனிக்கத்தக்க நடிகராக மாறினார்
இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இவர் கதாநாயகனாக நடித்துள்ள சட்டம்பி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டிக்காக கலந்து கொண்டார் ஸ்ரீநாத் பாஷி. அப்போது தொகுப்பாளர் தன்னை எரிச்சலூட்டும் விதமாக கேள்வி கேட்டதால் கோபமான ஸ்ரீநாத் பாஷி, கேரமாவை ஆப் செய்ய சொல்லிவிட்டு, அவரை அவதூறான வார்த்தைகளால் விமர்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து பின்னர் மன்னிப்பு தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் ஸ்ரீநாத் பாஷி. இந்தநிலையில் போலீசார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.. அதைத் தொடர்ந்து நேரில் சென்று, போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் பின்னர் ஸ்ரீநாத் பாஷி. அரைமணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.