இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. அதை தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த பின்பு அனைவராலும் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் அந்தப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் தொடர்ந்து மலையாளத்திலும் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இனி உத்தரம்'. இந்த படத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை சுதீஷ் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது. முதல் காட்சியிலேயே காட்டுக்குள் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் அபர்ணா பாலமுரளி, தான் ஒருவரை கொன்று விட்டதாக கூறி போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைக்கிறார்.
டிரைலரில் வெளியான காட்சிகளின்படி அவர் தனது பாய்பிரண்டை கொன்றுவிட்டதாக புரிந்துகொள்ள முடிகிறது. எதற்காக அவர் கொலை செய்தார் என்பதை போலீஸ் அதிகாரியான ஹரீஷ் உத்தமன் விசாரிப்பது போன்றும் அரசியல் அளவில் அபர்ணாவின் இந்த வாக்குமூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த டிரைலர் விறுவிறுப்பாக தயாராகி உள்ளது.