என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
மலையாள திரையுலகை சேர்ந்த வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி. தமிழில் கும்கி படத்தில் ரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், அதைத்தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை, கதகளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். மலையாளத்தில் வில்லனாக, குறிப்பாக சைக்கோ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவியர்கள் முன்பாக காரில் இருந்தபடி தனது ஆடைகளை கழற்றி அநாகரிகமாக நடக்க முயன்றார். இதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஸ்ரீஜித் ரவி தான் அது என்பதை உறுதி செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீஜித் ரவிக்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டதுடன் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீஜித் ரவி ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரிடம் சொல்லப்பட்டாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.