நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
கேரளாவில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய்பாபு இப்போது திரும்பி வந்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.
விஜய்பாபுவிடம் நடத்திய விசாரணையில் அவரை வெளிநாட்டு தப்பி ஓட ஆலோசனை சொன்னது, அவரது கிரடிட் கார்டுக்கு பணம் அனுப்பியது பிரபல மலையாள நடிகர் ஷைஜூ குரூப் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஷைஜூ குரூப்பிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் விஜய்பாபுக்கு உதவி செய்தது உண்மை தான் என்றும், விஜய்பாபு நான் நிரபராதி எனது தொழில் எதிரிகள் அந்த நடிகையை பயன்படுத்தி பழிவாங்க நினைக்கிறார்கள் என்று கண்ணீர் சிந்தியதால் நட்பின் காரணமாக அவருக்கு இந்த உதவிகளை செய்தேன். நான் உதவி செய்தபோது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. என்று கூறியுள்ளார்.