போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று(பிப்., 17) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61. மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த கோட்டயம் பிரதீப் அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மாறி முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவையில், குறிப்பாக வசன உச்சரிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர்கள் மனதில் எளிதாக பதிந்தார்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் கேரள உறவினராக நடித்திருந்தார் கோட்டயம் பிரதீப். அந்தப் படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் அவரது மவுசு இன்னும் கூடியது. அதைத்தொடர்ந்து மீண்டும் தமிழில் தெறி படத்தில் கேரளாவில் விஜய் நடத்தும் பேக்கரியில் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நடித்துள்ள மோகன்லாலின் ஆராட்டு படம் நாளை வெளியாக உள்ளது.