‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

சமீபத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு ஈடு கட்டியது. காட்சிகள் எல்லாமே ரியலிஸ்ட்டிக்காக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு படமாக்கி இருந்தார் இயக்குனர் சுகுமார். அதனால் தான் ராஷ்மிகா - அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை கூட அவர் ரொம்பவே நெருக்கமாக படமாக்கி இருந்தார். ஆனால் அது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதை குறிப்பிட்டு சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் சுகுமார், “இதற்கே இப்படி என்றால், அல்லு அர்ஜுன்-பஹத் பாசில் நடித்த் க்ளைமாக்ஸ் காட்சியில் இருவரையும் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடிக்க வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்கினோம். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அது நிச்சயம் விமர்சனத்துக்கு ஆளாகும் என பலரும் கருதியதால், அதை படத்திலிருந்து தூக்கிவிட்டு, வேறு மாதிரியாக அந்த சண்டைக்காட்சியை படமாக்கினோம் என்று கூறியுள்ளார்.