கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் | மங்கத்தா, திரவுபதி 2 மோதல்... மாமன், மச்சான் மோதலா | ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு | 37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா |

சமீபத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு ஈடு கட்டியது. காட்சிகள் எல்லாமே ரியலிஸ்ட்டிக்காக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு படமாக்கி இருந்தார் இயக்குனர் சுகுமார். அதனால் தான் ராஷ்மிகா - அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை கூட அவர் ரொம்பவே நெருக்கமாக படமாக்கி இருந்தார். ஆனால் அது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதை குறிப்பிட்டு சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் சுகுமார், “இதற்கே இப்படி என்றால், அல்லு அர்ஜுன்-பஹத் பாசில் நடித்த் க்ளைமாக்ஸ் காட்சியில் இருவரையும் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடிக்க வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்கினோம். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அது நிச்சயம் விமர்சனத்துக்கு ஆளாகும் என பலரும் கருதியதால், அதை படத்திலிருந்து தூக்கிவிட்டு, வேறு மாதிரியாக அந்த சண்டைக்காட்சியை படமாக்கினோம் என்று கூறியுள்ளார்.




