2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த சில வருடங்களுக்கு முன் தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் வெளியாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த படம் 'கேஜிஎப் - சாப்டர் 1'. இந்தப்படத்தை பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துவிட்டு தற்போது தெலுங்கில் பிரபாஸை வைத்து 'சலார்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தை முடித்த பின்னர் அவர் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தசரா பண்டிகை தினமான நேற்று ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்ற இயக்குனர் பிரசாந்த் நீல் அங்கே சிரஞ்சீவியிடமும் ராம்சரணிடமும் கதை குறித்து விவாதித்துள்ளார். அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் பிரசாந்த் நீல். இந்தப்படத்தை டிவிவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.