‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் |

கடந்த சில வருடங்களுக்கு முன் தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் வெளியாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த படம் 'கேஜிஎப் - சாப்டர் 1'. இந்தப்படத்தை பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துவிட்டு தற்போது தெலுங்கில் பிரபாஸை வைத்து 'சலார்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தை முடித்த பின்னர் அவர் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தசரா பண்டிகை தினமான நேற்று ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டுக்கு சென்ற இயக்குனர் பிரசாந்த் நீல் அங்கே சிரஞ்சீவியிடமும் ராம்சரணிடமும் கதை குறித்து விவாதித்துள்ளார். அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் பிரசாந்த் நீல். இந்தப்படத்தை டிவிவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.