தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன், நேரடியாக கோடம்பாக்கத்துக்கு ரயிலேறி வந்து, இசை அமைத்து, இயக்கி உள்ள படம்.
சுரேஷ்குமார், அக்ஷதா என்ற புதுமுகங்கள் ஹீரோ-ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், டி.பி.கஜேந்திரன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் அசோக் கேமராவை கையாண்டிருக்கிறார். "இது காமெடி படம். டபுள் மீனிங் கிடையாது. கிளாமரான பாட்டு, ஆட்டம் கிடையாது. சரியான சந்தர்ப்பங்கள் அமையும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவற விட்டால் பின்னர் வருந்த வேண்டியது இருக்கும். காதல் முதல் மார்க்கெட்டில் கத்திரிக்கா வாங்குவது வரை இதுதான் வாழ்க்கை தத்துவம். அதை கொஞ்சம் கலோக்கியலா மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்கன்னு சொல்லியிருக்கோம்" என்கிறார் இயக்குனர் சரவணன்.