விமர்சனம்
--------------------------------------------------------------
கல்கி விமர்சனம்
கணிதமேதை ராமானுஜனின் கும்பகோணம் டூ கேம்பிரிட்ஜ் பயணத்தின் அழகான தொகுப்பு இந்தப் படம்.
பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்? ஏன் பூஜ்யத்தை நீங்கள் மதிப்பதில்லை என்று பள்ளி ஆசிரியரை தமது வயதுக்கு மீறிய கணித ஞானத்தால் திணறிடிக்கிறான் சிறுவயது ராமானுஜன். ஆனாலும் கணிதத்தில் 100/100 வாங்கினால் போதுமா? மற்ற பாடங்களில் பெயிலாகி விட்டால் என்ன பயன் என ஆசிரியர்களால் ஒதுக்கப்படுகிறான்.
மகனின் கணித ஆர்வத்தால் அவன் பட்டப் படிப்பில் தேறுவதே கேள்விக்குறி என்பதால் தந்தை மிகவும் கோபப்படுகிறார். கிணதத்தில் மட்டுமே அதிகம் புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ராமானுஜத்துக்கு சொந்த ஊரில் யாரும் வேலை கொடுக்க மறுத்ததால், சென்னைக்குச் செல்கிறார். அங்கு அவரின் கணித அறிவைப் பலரும் போற்றினாலும் சென்னையிலும் வேலை கிடைக்கவில்லை. இதனால் மனம் வெறுத்து மீண்டும் சொந்த ஊருக்கே திரும்புபவருக்கு அவரது தாய் திருமணம் செய்து வைக்கிறார். ராமானுஜத்தின் திறமையை பார்த்து வியந்த பிரிட்டிஷ் பேராசிரியர் ஹார்டி உதவி செய்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று தன் அசாத்திய கணித ஆராய்ச்சியை தொடங்குகிறார்.
இந்நிலையில், ராமானுஜத்தை காசநோய் தாக்குகிறது. மனைவியின் பிரிவும் அவரை வாட்டுகிறார். இந்நிலையில் அவருடைய கணித ஆராய்ச்சி முடிந்ததா? மனைவியுடன் மீண்டும் சேர்ந்தாரா? அவருடைய நோய் குணமானதா என்பதே படத்தின் இரண்டாம் பாதி.
மறைந்த நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசன் - சாவித்ரி பேரன் அபினய் ராமானுஜன் கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறார். அனுபவம் உள்ள நடிகரை போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அபினய். மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாமா அழகுடன், நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்குகிறார். நிழல்கள் ரவி, சுஹாசினியின் அனுபவ நடிப்பு அருமை. சரத்பாபு, அப்பாஸ், ராதாரவி, டி.வி. கஜேந்திரன் என நட்சத்திர பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கியள்ளது. ஒளிப்பதிவாள் சன்னி ஜோசப் பின்.
ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை பிரமிப்பூட்டுகிறது.
பாரதி, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த இயக்குனர் ஞான ராஜசேகரனின் உன்னத முயற்சி. ராமானுஜனின் வாழ்க்கையில் உள்ள சோகங்களை அழகாக பார்வையாளர்ளுக்கு விளக்கியுள்ளார் இயக்குனர் ஞான ராஜசேகரன். திரையில் விரியும் நம் மண்ணின் முக்கிய ஆளுமையின் வாழ்வை கட்டாயம் நாம் பார்க்க வேண்டும். படிக்கும் மாணவ, மாணவியர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது.
ராமானுஜன் - படமல்ல, வாழ்க்கைப் பாடம்!
----------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ராமானுஜனின் தேவை இரண்டு வேளை சாப்பாடு. அது கிடைத்தால் கணித உலகையே வெல்லலாம். அதற்காக அந்த கணிமேதை படும் அவமானங்களும் வலிகளுமே திரைப்படமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணத்துக்கு குழந்தை ராமானுஜனில் ஆரம்பிக்கிறது படம். எந்த எண்ணையும் அந்த எண்ணால் வகுத்தால் ஈவு ஒன்றுதான் வரும் என்ற ஆசிரியரின் கணித வகுப்பில் அது எப்படி? பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று வருமா? - என்று கேட்டுத் திக்குமுக்காட வைக்கும் அந்த ஞானப்பழம் ராமானுஜனை கும்பகோணம் ஒதுக்குகிறது. பிற்காலத்தில் லண்டன் கொண்டாடுகிறது.
கணக்குதான் மூச்சு என்று வாழ்ந்த ராமானுஜனை வறுமை விரட்டுகிறது. கணிதத்தால் வேலை கிடைக்கவில்லை. திருமணம் செய்து வைத்தும் அவனால் கணிதத்தை மறக்க முடியவில்லை. அரிசி மண்டியில் வேலை கேட்டு நிற்கு அவலம். அவரது கணிதத்திறன் ஒரு வெள்ளைக்கார அதிகாரியால் கண்டுணரப்பட்டு, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைப் பேராசிரியர் ஹார்டியிடம் அனுப்பப்படுவது திருப்பம்.
அங்கும், மனைவியைப் பிரிந்த ஏக்கம், அசைவம் சாப்பிட மறுக்கும் ஆச்சாரப் பிடிப்பு. சக வெள்ளைக்கார மாணவர்களின் மன நோயாளி பட்டம், அதனால் உலக அங்கீகாரம் பறிபோவது இதெல்லாம் அவனை டி.பி. நோயில் தள்ளுவது பரிதாபம். ஹார்டியால் உலக அங்கீகாரம் கிடைத்ததா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
ராமானுஜனாக வரும் அபினவ் கனகச்சிதம் (ஜெமினி-சாவித்திரி பேரனாமே!). அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஹார்டி பாத்திரம் நம்மைக் கவர்கிறது.
குமுதம் ரேட்டிங் - நன்று














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!