‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லி. அதன்பிறகு விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். பின்பு பாலிவுட்டுக்கு சென்ற அவர் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து அல்லு அர்ஜூனின் 22வது படத்தை இயக்க இருக்கிறார்.
இது தவிர 'சங்கிலி புங்கிலி கதவ திற, அந்தகாரம்' என்ற தமிழ் படங்களையும், 'பேபி ஜான்' என்ற இந்திப் படத்தையும் தயாரித்தார். இந்த நிலையில் அட்லியின் கலைச் சேவையை பாராட்டி சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. அந்த விழாவில் அட்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.




