இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஆப்கானிஸ்தான் நாடு இப்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அங்குள்ள பெண்களை அடிமைகள் போன்று நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இளம் பெண்களை கட்டாய திருமணம் செய்து வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்திருப்பதை இந்தியாவில் உள்ள சில முஸ்லிம் பிரிவுகள் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதனை பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைவது ஒட்டுமொத்த உலகையே கவலைஅடையச் செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது.
தலிபான்களின் வெற்றியை கொண்டாடும் இந்திய முஸ்லிம்கள், நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா அல்லது பழமையான காட்டுமிராண்டிதனத்துடன் வாழ வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.