ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இரட்டை இலை சின்னம் அதிமுக.வுக்கு கிடைக்க உதவுவதாக கூறி, அதற்கு 50 கோடி கமிஷன் வேண்டும் என்று கேட்டவர் பண புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர். இதற்கு முன்பணமாக 1.3 கோடியை பெறும்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
இந்த வழக்கில் சிறையில் இருக்கும்போதே அரசு உயர் அதிகாரிகள் போல பேசி, பதவி உயர்வு, இடமாற்றம் பெற்று தருவதாக கூறி 200 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிந்த அமலாக்கத்துறையினர் சுகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சுகேஷூக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, சென்னையில் உள்ள சுகேஷின் சொகுசு பங்களாவில் 16 சொகுசு கார்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. அப்போது சுகேஷின் பண மோசடி தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஜாக்குலினுக்கும், சுகேசுக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கம் இருந்திருக்கிறது. ஜாக்குலின் மூலம் பல பண பரிமாற்றங்களை சுகேஷ் செய்திருக்கிறார் என்று அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. ஜாக்குலின் தற்போது சல்மான்கானின் நெருங்கிய தோழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.