சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது மனைவி கிரண்ராவை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 1986ம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்த ஆமீர்கான், 2002ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு 2005ம் அண்டு கிரண் ராவை திருமணம் செய்து கொண்டவர் தற்போது அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாங்கள் ஏன் விவாகரத்து செய்கிறோம் என்பது குறித்து ஆமீர்கானும், அவரது மனைவி கிரண்ராவும் இணைந்து விளக்கம் அளித்துள்ளனர். பாலிவுட் மீடியா ஒன்றுக்கு ஜூம் மீட்டிங் மூலம் அவர்கள் விளக்கம் அளித்தபோது இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி, கைகளை இறுக பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வீடியோவில் ஆமீர்கான் பேசியிருப்பதாவது: எங்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இந்த முடிவால் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளோம். கணவன் - மனைவி என்கிற உறவை மட்டுமே நாங்கள் இழக்கிறோம். மகன் ஆசாத்துக்காக இருவரும் ஒரே குடும்பமாக எப்போதுமே நட்பு பாராட்டி வாழ்வோம்.
நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்த கடந்த 15 ஆண்டுகளும் எங்களுக்கு பொன்னான ஆண்டாகவே இருந்தது. வாழ்க்கையை நிறைய சந்தோஷ தருணங்களுடன் வாழ்ந்து முடித்து விட்டோம். இனி இருவரும் சுதந்திர பறவையாக பறக்க ஆசைப்படுகிறோம். ரசிகர்கள் எங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இதனை ஒரு முடிவாக பார்க்காதீர்கள். இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பமாக பாருங்கள். என இருவரும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.