பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

'தலைவி' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள கங்கனா, தன்னுடைய நடிப்புத் திறமையை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் ஏற்கெனவே நிரூபித்துள்ளார்.
'தலைவி' படத்திற்குப் பிறகு 'தாகட், தேஜஸ்' என இரண்டு ஹிந்திப் படங்களில் நடிக்க உள்ளார். இவற்றோடு 'சீதா' படத்தில் நடிக்கவும் கங்கனாவை பரிந்துரை செய்துள்ளார் அப்படத்திற்குக் கதை எழுதி வரும் ராஜேந்திர பிரசாத்.
கங்கனா இதற்கு முன் நடித்த 'மணிகர்ணிகா, தலைவி' ஆகிய படங்களுக்கும் கதை உருவாக்கம் செய்தவர் இயக்குனர் ராஜமவுலியின் அப்பா ராஜேந்திர பிரசாத்.
'சீதா' கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு நிலவியது. ஆனால், கரீனாவை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க யாருமே அணுகவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்நிலையில் 'சீதா' கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அப்படி கிடைத்தால் அவர் ஏற்று நடிப்பாரா, என பாலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.