ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக, எதிரணி பவுலர்களை கதிகலங்க வைத்தவர் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு அதன்பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பியவர், டீம் 5 என்கிற மலையாள படத்தில் ஹீரோவாக நடித்தார் மேலும் ஒன்றிரண்டு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், தற்போது இந்தியில் 'பட்டா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் இந்த படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பது குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நான் உருவாக்கிய சிபிஐ ஆபீசர் கதாபாத்திரத்திற்கு, ஸ்ரீசாந்த் மிகப்பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவரிடம் இந்த கதை பற்றி கூறியபோது ஒரு காட்சியை என்னிடம் நடித்துக் காட்டினார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் இருப்பவர்களே, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று யூகிக்க முடியாத புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிரடியான சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்” என்று கூறியுள்ளார்