என்டிஆர், நீல் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்! | சித்தார்த் அப்படிப்பட்டவர் இல்லை! - கார்த்திக் ஜி கிரிஷ் | மலையாளத்தில் அறிமுகமாகும் துஷாரா விஜயன்! | குந்தனை நினைவுக்கூர்ந்த தனுஷ் | திரையுலக பயணம் 33 ஆண்டுகள் நிறைவு: டிச.4ல் வெளியாகிறது 'ஜனநாயகன்' இரண்டாம் பாடல் | 'பராசக்தி' படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்! | மகளுக்கு பெயர் சூட்டிய கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா தம்பதி! | 'தேரே இஷ்க் மே, ரிவால்வர் ரீட்டா' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'ரூட்' படத்தின் டப்பிங் முடித்த கவுதம் ராம் கார்த்திக்! | 'ஜீனி' படத்தின் புதிய அப்டேட் இதோ! |

ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக, எதிரணி பவுலர்களை கதிகலங்க வைத்தவர் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு அதன்பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பியவர், டீம் 5 என்கிற மலையாள படத்தில் ஹீரோவாக நடித்தார் மேலும் ஒன்றிரண்டு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், தற்போது இந்தியில் 'பட்டா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் இந்த படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பது குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நான் உருவாக்கிய சிபிஐ ஆபீசர் கதாபாத்திரத்திற்கு, ஸ்ரீசாந்த் மிகப்பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவரிடம் இந்த கதை பற்றி கூறியபோது ஒரு காட்சியை என்னிடம் நடித்துக் காட்டினார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் இருப்பவர்களே, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று யூகிக்க முடியாத புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிரடியான சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்” என்று கூறியுள்ளார்