'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் அவர்களால் முடிந்த பணிகளை செய்து வருகிறார்கள். அக்ஷய் குமார் 5 கோடி ரூபாய் வழங்கினார், சோனுசூட் வழக்கம்போல் தன் பணிகளை சுறுசுறுப்பாக தொடங்கி விட்டார். சல்மான்கான் ஆக்சிஜன் சிலிணடர் வங்கி தொடங்கி உள்ளார். பிரியங்கா சோப்ரா வெளிநாட்டில் நிதி திரட்டி வருகிறார்.
இந்த வரிசையில் நடிகை ஆலியா பட் தனது எடர்னல் சன்ஷைன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தொடர் ஒன்றை தயாரிக்கிறார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கக்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அறிவியலே நமது நல்ல நண்பன். அறிவியல் நமக்கு தடுப்பூசியைத் தந்திருக்கிறது. தடுப்பூசிகள் நமக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்த நோய்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து நமது வாழ்வை மீண்டும் கட்டமைக்க உதவும் தடுப்பூசிகளுக்கு நன்றி.
தடுப்பூசி நமக்காகக் காத்திருந்தும் நம்மில் சிலர் இன்னும் அதை போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறோம். இந்தத் தயக்கத்துக்கு முக்கியக் காரணம், சமூக ஊடகம் உள்ளிட்ட தளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள், புரளிகள்.
இதனால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடரை தயாரிக்கிறேன். இந்தத் தொடரில், திறமையான மருத்துவர்கள், சர்வதேச சுகாதார ஆர்வலர்களிடம் பேசப் போகிறோம். அவர்கள் தடுப்பூசி பற்றிய உண்மைத் தகவல்களை, பகிரவுள்ளனர். இந்தத் தொடர் தடுப்பூசி பற்றிய மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க உதவும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்திருக்கிறார். இந்த தொடர் ஆடியோமேடிக் என்கிற பாட்காஸ்ட் தளத்தில் வெளியிடப்படுகிறது.