டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
கொரோனா முதல் அலை வீசும்போது நடிகர்கள் பணமாக நிதி கொடுத்தபோதும் களத்தில் இறங்கி பல நடிகைகள் பணியாற்றினர். அதேபோன்று இப்போது இரண்டாவது அலையிலும் நடிகைகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கொரோனா 2வது அலை காலத்தில் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த அறக்கட்டளையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சிவானந்தன் மற்றும் ரோடி வங்கியும் இணைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை ஒரு கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நேரடியாகவே உணவு வழங்கி வருகிறார்.
இதேபோல ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் நடிகை பிரணிதி பணியை தொடங்கி விட்டார். தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் பொதுமக்களுக்கு உணவளிக்கும் பணியை தொடங்கி விட்டார். தினமும் 600 பேருக்கு உணவளிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். சஞ்சனா கல்ராணி போதை பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.