கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
சின்னத்திரையில் பல மொழிகளில் ஒளிபரப்பான பிரமாண்ட புராணத் தொடர் ஸ்ரீகிருஷ்ணா. இதில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர் சுனில் நாகர். அதன்பிறகு ஹனுமான் தொடரில் பிரம்மனாக நடித்திருந்தார். சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், தன்னை மகன்கள் கைவிட்டு விட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை எல்லாம் என் மகனின் படிப்புக்கும், வளர்ச்சிக்கும் செலவு செய்தேன். ஆனால் இப்போது எனக்கு நடிப்பு வாய்ப்பும் இல்லை. முதுமையும் அடைந்து விட்டேன். இந்த நிலையில் என் மகன் என்னை கைவிட்டு விட்டான். உறவினர்களும் கைவிட்டு விட்டனர்.
தற்போது வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். அந்த வீட்டிற்கும் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் பாடல் பாடி அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் வாழ்ந்து வந்தேன். இப்போது கொரோனா காலத்தில் அந்த வேலையும் இல்லை. இதனால் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டு இந்தி நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.