சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

சின்னத்திரையில் பல மொழிகளில் ஒளிபரப்பான பிரமாண்ட புராணத் தொடர் ஸ்ரீகிருஷ்ணா. இதில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர் சுனில் நாகர். அதன்பிறகு ஹனுமான் தொடரில் பிரம்மனாக நடித்திருந்தார். சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், தன்னை மகன்கள் கைவிட்டு விட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை எல்லாம் என் மகனின் படிப்புக்கும், வளர்ச்சிக்கும் செலவு செய்தேன். ஆனால் இப்போது எனக்கு நடிப்பு வாய்ப்பும் இல்லை. முதுமையும் அடைந்து விட்டேன். இந்த நிலையில் என் மகன் என்னை கைவிட்டு விட்டான். உறவினர்களும் கைவிட்டு விட்டனர்.
தற்போது வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். அந்த வீட்டிற்கும் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் பாடல் பாடி அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் வாழ்ந்து வந்தேன். இப்போது கொரோனா காலத்தில் அந்த வேலையும் இல்லை. இதனால் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டு இந்தி நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.