திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
சின்னத்திரையில் பல மொழிகளில் ஒளிபரப்பான பிரமாண்ட புராணத் தொடர் ஸ்ரீகிருஷ்ணா. இதில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர் சுனில் நாகர். அதன்பிறகு ஹனுமான் தொடரில் பிரம்மனாக நடித்திருந்தார். சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், தன்னை மகன்கள் கைவிட்டு விட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை எல்லாம் என் மகனின் படிப்புக்கும், வளர்ச்சிக்கும் செலவு செய்தேன். ஆனால் இப்போது எனக்கு நடிப்பு வாய்ப்பும் இல்லை. முதுமையும் அடைந்து விட்டேன். இந்த நிலையில் என் மகன் என்னை கைவிட்டு விட்டான். உறவினர்களும் கைவிட்டு விட்டனர்.
தற்போது வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். அந்த வீட்டிற்கும் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் பாடல் பாடி அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் வாழ்ந்து வந்தேன். இப்போது கொரோனா காலத்தில் அந்த வேலையும் இல்லை. இதனால் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டு இந்தி நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.