Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மகாபாரதம் என் கனவுப்படம்! அமீர் கான்

27 நவ, 2012 - 11:50 IST
எழுத்தின் அளவு:

மகாபாரதம் இதிகாசத்தை இயக்கி நடிக்க வேண்டும்; அதுதான் என் கனவுப்படம் என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். தாரே ஜமீன் பார் படத்தை இயக்கி உலக அளவில் பேச வைத்தவர் பாலிவுட் நடிகர் அமீர்கான். நடிகராக இருந்தாலும் மஞ்சில் மஞ்சில், ஜபர்தஸ்த் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தது தற்போது அமீர்கானுக்கு கை கொடுத்தது. இதேபோல் மகாபாரதம் இதிகாசத்தை இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அமீர்கான் அளித்துள்ள பேட்டியில், நடிகராக எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. பீகோ, தூம்3 படங்களில் என் பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும். தவிர சத்யமேவ ஜெயதே-2 வேறு கைவசம் இருக்கிறது. இவற்றை முடித்து விட்டு மகாபாரதம் கதையை கையில் எடுக்கவேண்டும் என நினைத்துள்ளேன். இதிகாச காவியத்தை செய்வது சாதாரண விசயமல்ல. அதற்கான இடங்கள், உடைகள் என பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு நாள் நிச்சயம் பெரிய திரையில் என கனவுத் திட்டமான மகாபாரதம் கதையை செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)