பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி | 100 கோடி வசூல் கடந்த 'மிராய்' | கிஸ் கொடுத்தது மிஷ்கின் தான் : மேடையில் அறிவித்த கவின் | இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி |
கோவா, கோல்கட்டா, சென்னை, திருவனந்தபுரம் சர்வதேச பட விழாக்களை போன்று மும்பை சர்வதேச பட விழாவும் முக்கியமானது. இந்த விழாக்குழுவின் தலைவராக அமீர்கானின் மனைவி கிரண் ராவ் இருந்தார். கடந்த 2019ல் மும்பை திரைப்பட விழா தலைவராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோனே திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்ட்ராகிராமில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை திரைப்பட விழா தலைவராக இருந்து சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது எனது இதர பணிகள் காரணமாக திரைப்பட விழா தலைவர் பதவிக்கு அர்ப்பணிப்பை கொடுக்க இயலவில்லை. எனவே இந்த பதவியில் இருந்து விலகுகிறேன். என்று கூறியுள்ளார்.