லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் அதிக வேகத்துடன் பரவி வருகிறது. பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்து வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வார இறுதியில் ஊடரங்கும், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமுலில் இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தியேட்டர்களை வருகிற ஏப்ரல் 30ந் தேதி வரை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 30ந் தேதிக்கு பிறகு சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.