அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது பயோபிக் படங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கெனவே ராணி லட்சுமிபாய் பயோபிக்கான மணிகர்னிகாவில் நடித்தார். தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்து வருகிறார். அடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். டிட்டாவின் கதை என்னிடம் உள்ளது. அந்த கதையை தெரிந்து கொண்டு அதை கங்கனா சினமாவாக்க முயற்சிப்பதாக பிரபல இந்தி எழுத்தாளர் ஆஷிக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கங்கனா மீது கதை திருட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டா என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன். கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். என்கிறார்.