சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

இந்திய சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் சந்தித்திராத எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், வழக்குகளையும், தடைகளையும் சந்தித்து அனைத்தையும் வென்று வெளிவந்திருக்கிறது பத்மாவத் திரைப்படம். பத்மாவத் படத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டது. அவை எல்லாவற்றிலும் பத்மாவத்துக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
கடைசியாக படம் வெளிவந்து விட்ட நிலையிலும் அதில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று டில்லி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மிஸ்ரா அடங்கிய பென்ஞ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் "பத்மாவத் திரைப்படத்தை தணிக்கை குழு நன்றாக ஆராய்ந்து சில காட்சிகளை நீக்கி, சில மாறுதல்களை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தை வெளியிடவும் அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகும் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. படத்தை திரையிடுவதை தடுக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.