Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான்கானிடம் ரூ.250 கோடி கேட்டு தயாரிப்பாளர் வழக்கு

24 ஜூன், 2015 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Defamation-case-against-Salman-Khan

சல்மான்கான் நடித்த வீர் படத்தை தயாரித்தவர் விஜய் கலானி. படம் தயாரிப்பதற்கு முன்பு சல்மான் கானுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தார். படம் வெளியான பிறகு அதன் லாபத்திலிருந்து 15 கோடி சல்மானுக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடி லாபம் ஈட்டவில்லை. இதனால் தயாரிப்பாளர் சல்மான்கானுக்கு மீதி 15 கோடியை கொடுக்கவில்லை.


இந்த நிலையில் சல்மான்கான் அந்த ஒப்பந்தம் செல்லாது எனக்கு தரவேண்டிய 15 கோடியை பெற்றுத் தரவேண்டும் என்று இந்தி நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த நடிகர் சங்கம் தயாரிப்பாளர் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறிவிட்டது. இதனை எதிர்த்து சல்மான்கான் மேற்கிந்திய சினிமா சங்கத்தில் புகார் செய்தார். இந்த சங்கம் சல்மான்கான் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியதோடு தயாரிப்பாளர் விஜய் கலானிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற முடிவை அறிவித்தது. இதனை இந்தி நடிகர் சங்கம் ஏற்கவில்லை.


இந்த நிலையில் சல்மான்கான் மீது தயாரிப்பாளர் விஜய் கலானி, ரூ. 250 கோடி கேட்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது இந்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)