உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
சல்மான்கான் நடித்த வீர் படத்தை தயாரித்தவர் விஜய் கலானி. படம் தயாரிப்பதற்கு முன்பு சல்மான் கானுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தார். படம் வெளியான பிறகு அதன் லாபத்திலிருந்து 15 கோடி சல்மானுக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடி லாபம் ஈட்டவில்லை. இதனால் தயாரிப்பாளர் சல்மான்கானுக்கு மீதி 15 கோடியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சல்மான்கான் அந்த ஒப்பந்தம் செல்லாது எனக்கு தரவேண்டிய 15 கோடியை பெற்றுத் தரவேண்டும் என்று இந்தி நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த நடிகர் சங்கம் தயாரிப்பாளர் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறிவிட்டது. இதனை எதிர்த்து சல்மான்கான் மேற்கிந்திய சினிமா சங்கத்தில் புகார் செய்தார். இந்த சங்கம் சல்மான்கான் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியதோடு தயாரிப்பாளர் விஜய் கலானிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற முடிவை அறிவித்தது. இதனை இந்தி நடிகர் சங்கம் ஏற்கவில்லை.