பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
2002ம் ஆண்டு போதையில் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜாமின் கோரி சல்மான் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சல்மான் கானுக்கு 2 நாட்கள் ஜாமின் அளித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் சல்மான் கானுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அபாஸ் சிங் என்பவர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சல்மான் கானுக்கு வழங்கிய ஜாமினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை மே 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.