Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்தி படத்தில் சசிகுமார்!

28 டிச, 2014 - 10:20 IST
எழுத்தின் அளவு:

சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்து வெளியிட்டவர் சசிகுமார். அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் நடிகர்-டைரக்டர் என்ற இரண்டு முகங்களுடன் கோலிவுட்டில் இடம்பிடித்துள்ள அவர், தற்போது பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பே அப்படத்திற்காக கரகாட்ட பயிற்சி எடுத்த சசிகுமார், சமீபத்தில்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.


அதனால் தாரைதப்பட்டை படப்பிடிப்பு எப்போது முடியுமோ அதன்பிறகுதான் அவர் வேறு படஙகளில் நடிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழில் எந்த டைரக்டரிடமும் அவர் அடுத்த படத்திற்கான கதை கேட்கவில்லை. இதற்கிடையே, விஜய்யைக்கொண்டு அட்லி படம் இயககி முடித்ததும் அதற்கடுத்து விஜய் நடிக்கும் படத்தை சசிகுமார் இயக்கயிருப்பதாகவும் செய்தி பரவியுள்ளது. இந்தநிலையில், தற்போது ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்கு சசிகுமார் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த படம் அவர் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் இந்தி ரீமேக்தானாம். தமிழில் வெளியான அப்படம், பின்னர், தெலுங்கு கனனடத்தில் வெளியானது. அதையடுதது இந்தியில் தானே இயக்க முடிவு செய்திருந்தார் சசிகுமார். ஆனால் என்ன காரணமோ இப்போது இந்தி உரிமையை வேறு நபருக்கு கொடுத்து விடடார். அப்படத்தில் நாயகனாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவு- செய்யப்படவில்லை என்றாலும், சசிகுமார் ஒரு வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். அது எந்த வேடம் என்பதும் சஸ்பென்சாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)