பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஹிருத்திக் ரோஷன் சமீப காலமாக யாருடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறார். ஹிருத்திக் இப்படி ஒதுங்கி செல்லும் அளவிற்கு அப்படி என்ன தான் நடந்தது என்று விசாரித்ததில், இஷா குப்தாவுடன் இணைத்து வெளியிடப்படும் கிசுகிசு தான் காரணம் என கூறப்படுகிறது.
சமீப காலமாக ஹிருத்திக் எந்த விழாவிற்கு சென்றாலும் இஷா குப்தாவும் அங்கு ஆஜராகி விடுகிறாராம். துபாயில் ரெஸ்டாரன்ட் ஒன்றின் திறப்பு விழாவிற்கு ஹிருத்திக் போயிருக்கும் போதும், அங்கு இஷா வந்திருந்தாராம். இருப்பினும், இஷாவுடன் வழக்கம் போல் சாதாரணமாக பேசிவிட்டு போய் விட்டாராம் ஹிருத்திக். ஆனால் இந்த சந்திப்பு பலவகையிலும் கிசுகிசுக்கப்பட்டு, இஷாவுடன் ஹிருத்திக்கிற்கு உறவு ஏற்பட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்தது.
இந்த கிசுகிசுக்கள் உண்மை என்பது போல், சூட்டிங்கில் படுபிசியாக இருக்கும் இஷாவும் தான் ஹிருத்திக்குடன் இணைந்து நடிக்க விரும்புவதாக சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். மேலும் இவர்கள் உறவு பற்றியும் இஷா அனாவசியமான பேட்டிகளையும் அளித்து வருகிறாராம். இஷாவின் இந்த செயல்களால் ஹிருத்திக் ஏகத்துக்கும் கோபத்தில் இருக்கிறாராம்.
இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடமும், தன்னிடம் இஷாவுடனான உறவு பற்றி கேட்க வருபவர்களிடமும், போதும் இது போன்ற பேச்சுக்கள் என கண்டிப்புடன் கூறும் ஹிருத்திக், எனது பெயரையும் புகழையும் இதுபோன்று தவறாக பயன்படுத்தாதீர்கள் என கேட்டுக் கொள்கிறாராம்.