உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தனது குடும்பத்துடனும், தனது தற்போதைய நண்பர் ரன்வீர் சிங்குடனும் தீபாவளியை கொண்டாடி உள்ள தீபிகா படுகோனே, தனது பழைய மற்றும் தற்போதைய உறவுகள் பற்றி வெளிப்படையான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தீபிகாவோடு கிசுகிசுக்கப்பட்ட ரன்பீர் கபூர் பற்றியும் பேசி உள்ளார்.
பேட்டியில் அவர் கூறுகையில், நாங்கள் இப்போது தொடர்பில் இல்லை. அதே சமயம் எப்போதும் எங்கள் உறவு ரொம்ப ஸ்பெஷல். மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடிய வயதில் நாங்கள் ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் வந்து விட்டோம் என கூறிய தீபிகா, ரன்வீர் பற்றி பேசுகையில், ரன்வீர் மிகவும் வெளிப்படையான உற்சாகமான ஆள். யாரையும் சட்டென்று கவர்ந்து விடுவார். உறவு என்பது ஒரே இரவில் ஏற்பட்டு விடுவது இல்லை. இது ஒரு சமன்பாடு போன்று. அதை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு நல்ல மனிதராக ரன்வீரிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளதாக நான் நினைக்கிறேன் என கூறி உள்ளார்.