Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்டார் ஆவேன் என எதிர்பார்க்கவில்லை- சொல்கிறார் தீபிகா

15 செப், 2014 - 10:17 IST
எழுத்தின் அளவு:

2013ம் ஆண்டில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ், யேஹ் ஜவானி ஹெய் திவானி, ரேஸ் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் பாலிவுட்டில் அதிகம் பேசப்படும் நடிகையாகவே தீபிகா படுகோனே மாறி விட்டார். பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள தீபிகா, ஸ்டார் அந்தஸ்து தன்னை விட்டு போய்விடுமோ என தான் எப்போதும் பயப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

தீபிகா நடித்து கடந்த வாரம் வெளியான ஃபைண்ட் ஃபன்னி படம், வசூலை அள்ளி குவித்து வருகிறது. இந்த வெற்றியை நேரில் காண வந்த தீபிகாவிடம், ஸ்டார் அந்தஸ்து போய் விடும் என்ற பயம் உங்களுக்கு உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தீபிகா, கிடையவே கிடையாது. ஸ்டார் அந்தஸ்து என்பது வாழ்க்கை முழுவதும் தொடராது என்பது எனக்கு தெரியும். எனது வேலையில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்.


இந்த அளவிற்கு ஸ்டார் ஆவேன் என்பதே என் வாழ்நாளில் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. அதனால் ஸ்டார் அந்தஸ்டு நான் பயம் கொள்ளவில்லை. ஒருவேளை, ஸ்டார் அந்தஸ்து வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என யாராவது விரும்பினால் அது நடக்காத ஒன்று. அது வீழ்ச்சியைத்தான் தரும் என தெரிவித்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)