Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பெண்களே... கத்தி வச்சுக்கோங்க - ஷில்பா அறிவுரை!!

08 செப், 2013 - 11:08 IST
எழுத்தின் அளவு:

 ""அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும், என, பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி தெரிவித்தார். மும்பையில், விநாயகர் சதுர்த்தி விழா, மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். வில்லே பார்லே என்ற இடத்தில், விநாயகர் சதுர்த்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த, போலீஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

அதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை, ஷில்பா ஷெட்டி கூறியதாவது: போலீசாரின் பணி மிகவும் கடினமானது. உண்மையில் அவர்கள் மேற்கொள்ளும் பணி உன்னதமானது. அதற்காக முழு பொறுப்பையும் அவர்கள் மேல் இறக்கி வைக்கக் கூடாது. அனைவரும், பாதுகாப்பாக இருக்க, தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது, போலீஸ் பாதுகாப்பை எதிர்பார்த்திருக்கக் கூடாது. பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை, பெண்களே மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தங்கள் பாதுகாப்பிற்கு, கத்தி வைத்துக் கொள்ளலாம். அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள, பெண்கள் கத்தி வைத்துக் கொள்வதில் தவறில்லை.


மும்பை, சக்தி மில்ஸ் வளாகத்தில், பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்ததும், இந்த சமூகத்திலா நாம் வாழ்கிறோம் என, நான் வெட்கப்பட்டேன். இவ்வாறு நடிகை, ஷில்பா ஷெட்டி கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)