பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
""அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும், என, பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி தெரிவித்தார். மும்பையில், விநாயகர் சதுர்த்தி விழா, மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். வில்லே பார்லே என்ற இடத்தில், விநாயகர் சதுர்த்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த, போலீஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை, ஷில்பா ஷெட்டி கூறியதாவது: போலீசாரின் பணி மிகவும் கடினமானது. உண்மையில் அவர்கள் மேற்கொள்ளும் பணி உன்னதமானது. அதற்காக முழு பொறுப்பையும் அவர்கள் மேல் இறக்கி வைக்கக் கூடாது. அனைவரும், பாதுகாப்பாக இருக்க, தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது, போலீஸ் பாதுகாப்பை எதிர்பார்த்திருக்கக் கூடாது. பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை, பெண்களே மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தங்கள் பாதுகாப்பிற்கு, கத்தி வைத்துக் கொள்ளலாம். அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள, பெண்கள் கத்தி வைத்துக் கொள்வதில் தவறில்லை.
மும்பை, சக்தி மில்ஸ் வளாகத்தில், பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்ததும், இந்த சமூகத்திலா நாம் வாழ்கிறோம் என, நான் வெட்கப்பட்டேன். இவ்வாறு நடிகை, ஷில்பா ஷெட்டி கூறினார்.