8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

கேரள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகப்படியான கேளிக்கை வரியை நீக்குவது, திரையரங்குகளுக்கு என விதிக்கப்படும் மின்சார கட்டணத்தை முறைப்படி குறைத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை கேரள அரசிடம் தொடர்ந்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன.
ஆனால் அவற்றில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் ஜனவரி 22ம் தேதி ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கேரளா பிலிம் சேம்பர் தலைவர் அனில் வி தாமஸை அழைத்து கேரளா கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இவர்களது குறைகளை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதன் பேரில் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மலையாள திரையுலகம் கைவிட்டுள்ளது.




