பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

இந்தியத் திரையுலகத்தில் 2025ம் ஆண்டில் 1000 கோடி படங்களே வரவில்லை என்று இருந்த ஏக்கத்தை கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் வெளிவந்த ஹிந்திப் படமான 'துரந்தர்' தீர்த்து வைத்தது.
இந்திய அளவில் இதுவரையில் வெளியான படங்களில், இப்படம் தற்போது அதிக வசூலைக் குவித்த படங்களில் நம்பர் 1 என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 830 கோடிகளுடன் 'புஷ்பா 2' படம் முதலிடத்தில் இருந்தது. தியேட்டர்களில் மொத்தமாக ஓடிய நாட்களில் பெற்ற வசூல் அது. அதை 33 நாட்களில் முறியடித்துள்ளது 'துரந்தர்'.
இன்னும் 'துரந்தர்' படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், அந்த வசூல் தொகை இன்னும் அதிகரிக்கலாம். உலக அளவில் மொத்தமாக 1300 கோடியை நோக்கி அதன் வசூல போய்க் கொண்டிருக்கிறது. இதனால், அடுத்து 'துரந்தர் 2' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.